search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழிப்பு விழிப்புணர்வு"

    நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம், நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம், நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தொடங்கியது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசார வாகனத்தில் சென்று, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்த கையேடுகளும் பொதுமக்களுக்கு வழங்கினர். நீதிபதிகள் அருள் முருகன், ஜெயராஜ், சந்திரா, ஹேமானந்த குமார், கங்கராஜன், தனஞ்செயன், வக்கீல்கள் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன், குழந்தை தொழிலாளர் நல அலுவலர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×